கொட்டகலை – வூட்டன் பகுதியில் அனுமதியின்றி மான் மற்றும் மயிலை வளர்த்து வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளதாக நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேசிய புலனாய்வு அதிகாரிகளினால் வழங்கிய தகவலுக்கமைய திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை வூட்டன் பகுதியிலுள்ள பண்ணையொன்றிலிருந்தே நேற்று பிற்பகல் வனவிலங்கு அதிகாரிகள் இவற்றை மீட்டுள்ளனர்.
குறித்த நபரை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதுடன் மீட்கப்பட்ட வன விலங்குகளை சரணாலயத்தில் ஒப்படைப்பதாக தெரிவித்துள்ளனர்.