அதாவுல்லாவிடம் மரிக்கார் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்கிறார் – அகில‌ இல‌ங்கை முஸ்லிம் க‌ட்சியின் த‌விசாள‌ர்

unnamed 23
unnamed 23

இலங்கை முஸ்லிம்க‌ளின் ஆடை எது என்று தெரியாத‌ ஒருவ‌ராக‌ நாடாளும‌ன்ற‌ உறுப்பின‌ர் எஸ் எம் ம‌ரிக்கார் இருப்ப‌து க‌வ‌லைக்குரிய‌து என அகில‌ இல‌ங்கை முஸ்லிம் க‌ட்சியின் த‌விசாள‌ர் ருஷ்தி நாசிர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்துக்கு தேசிய ஆடையை அணிந்துச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவை ஐ.எஸ்.ஐ.எஸ் ஆடையை அணிந்து வந்திருப்பதாக விமர்சித்த மரிக்கார், அதாவுல்லாவிடம் மன்னிப்புக் கேட்க வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.