கடந்த 7 வாரங்களில் சமூகத்தில் கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்படவில்லை!

ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதிக்கு பின்னர் சமூகத்தில் இருந்து கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, கடந்த 7 வாரங்களில் நாட்டு மக்களிடையே கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்படவில்லை என தொற்றுநோய் தடுப்பு பிரிவின் தலைமை வைத்திய நிபுணர் சுதத் சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

இதனூடாக நாட்டில் கொரோனா தொற்று அச்சுறுத்தல் இல்லாமற்போயுள்ளது என அர்த்தப்படுத்த முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

ஆகவே, சுகாதார வழிமுறைகளை பொதுமக்கள் தொடர்ந்தும் பின்பற்றுதல் அவசியம் என விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.