இலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான நியூ டயமன்ட் கப்பலின் கிரேக்க நாட்டு கப்டனை விளக்கமறியலில் வைக்க வேண்டும் என்ற சட்டமா அதிபரின் கோரிக்கையை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
நீதிமன்றம் விடுத்துள்ள அழைப்பாணைக்கு அமைய, இன்று (28) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் குறித்த கப்பலின் கேப்டன் ஆஜரானார்.
கடந்த செப்டெம்பர் 17ஆம் திகதி கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகேவினால் குறித்த அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.
இதன்போதே சட்ட மாஅதிபர் சார்பில் கப்பலின் மாலுமியை விளக்கமறியலில் வைக்குமாறு, கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இருப்பினும் குறித்த கோரிக்கையினை நிராகரித்துள்ள நீதவான் நியூ டயமன்ட் கப்பலின் கிரேக்க நாட்டு கேப்டனுக்கு வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.