சிறப்புற இடம்பெற்ற மகாவிஷ்ணு ஆலயத்தின் இரதோற்சவம்.

IMG ba6eb0326078d6b8b2820ca63bf8ffab V
IMG ba6eb0326078d6b8b2820ca63bf8ffab V

வவுனியா – கோவில்குளம் அருள்மிகு ஶ்ரீதேவி பூதேவி சமேத மகாவிஷ்ணு ஆலயத்தின் இரதோற்சவம் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

IMG 7fd050331e8b4be294df090a9c4b9e1e V
IMG 7fd050331e8b4be294df090a9c4b9e1e V


பக்தர்கள் சூழ இன்று (30) காலை 7.30 முதல் கிரியைகள் இடம்பெற்று காலை 10 மணியளவில் வசந்தமண்டப பூஜை நடைபெற்றது. இதனை தொடர்ந்து மகாவிஷ்ணு உள்வீதி வலம் வந்து 11 மணியளவில் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

IMG ed019554ed2d3d435a9f47537d6e8ef4 V
IMG ed019554ed2d3d435a9f47537d6e8ef4 V


22 ஆம் திகதி காலை 11 மணிக்கு  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய பெருவிழா விஞ்ஞாபனமானது இன்று 30 ஆம் திகதி தேர்த்திருவிழா இடம்பெற்றிருந்தது.  நாளையதினம் தீர்த்த திருவிழாவும் இடம்பெறும்.
பூசைபுணருத்தான பணிகளில் ஆலயத்தின் பிரதமகுரு சிவஶ்ரீ முத்து இரத்தின வைத்தியநாதக்குருக்கள், ஆலய ஸ்தானிககுரு சிவஶ்ரீ ஜெகதீஸ்வரமயூரக்குருக்கள் பங்கெடுத்திருந்தனர்.

IMG c2111e6ca9a0a411c1c86f7d0c0a0264 V
IMG c2111e6ca9a0a411c1c86f7d0c0a0264 V


இதன்போது, அடியார்கள் அங்கபிரதட்சினை , காவடிகள் மற்றும் கற்பூர சட்டி என்பவற்றை ஏந்தி தங்களது நேர்த்திகடன்களை செலுத்தினர்.  தேர் இருப்பிடத்தை வந்தடைந்ததை தொடர்ந்து அர்ச்சனைகளும் இடம்பெற்றிருந்தது.

IMG f7a5c46f4a80dbf80e09bdff08fe907e V
IMG f7a5c46f4a80dbf80e09bdff08fe907e V
IMG c5e9399bbb2702b28c44d1b5af4a2038 V
IMG c5e9399bbb2702b28c44d1b5af4a2038 V