20க்கு எதிரான மனுக்கள் மீதான பரிசீலனை மீண்டும் ஒத்திவைப்பு

1601475939 Petitions 2
1601475939 Petitions 2

பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றில் குறித்த மனுக்கள் இன்று (30) 2 ஆவது நாளாக பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் குறித்த மனுக்கள் மீதான பரீசிலனை மீண்டும் நாளை மறுதினம் (02) காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.