நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வு குறித்த செய்தி வெளியானது !

unnamed 1
unnamed 1

இலங்கையின் நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வு எதிர்வரும் ஆறாம் திகதி முதல் 09ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, ஒக்டோபர் 06ஆம் திகதி, நிதி திருத்த சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு மற்றும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

அத்துடன், அன்றையதினம் ஆளும் கட்சியினால் முன்வைக்கப்படும் சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதம் பிற்பகல் 4.30 முதல் 5.30 மணிவரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.