கம்பஹா மாவட்டத்திலிருந்து யாழ் பல்கலைக்கழகத்துக்கு வருகைதந்த மாணவர்களின் மாதிரிகள் பி.சி.ஆர்.பரிசோதனைக்கு!

pcr exame 1
pcr exame 1

கம்பஹா மாவட்டத்திலிருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு அண்மைய நாட்களில் வருகை தந்த 9மாணவர்களின், மாதிரிகள் பெறப்பட்டு, பி.சி.ஆர்.பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரியால் இந்த நடவடிக்கை இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கம்பஹா- மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிபவர்களுக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது.

இந்த நிலையில் கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு வருகை தந்த 9 மாணவர்கள், அவர்கள் தங்கியுள்ள இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் மாதிரிகள் நேற்று பெறப்பட்டு பி.சி.ஆர்.பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அவர்களின் பி.சி.ஆர்.பரிசோதனை அறிக்கை, நாளை (செவ்வாய்க்கிழமை) கிடைக்கப்பெறும் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.