ஜீவன் தொண்டமானை சந்தித்தார் மாலைதீவு உயர்ஸ்தானிகர்!

IMG 20201006 WA0026
IMG 20201006 WA0026

நுவரெலியா மாவட்டத்திலிருந்து  மரக்கறிகளை மாலைத்தீவிற்கு ஏற்றுமதி செய்தல் குறித்து தோட்ட  வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மாலைதீவு உயர்ஸ்தானிகர் உமர் அப்துள் ரசாக்வுடன் கலந்துரையாடியுள்ளார்.

அமைச்சர் ஜீவன் தொண்டமானின் அலுவலகத்தில் இடம்பெற்ற குறித்த சந்திப்பில்,

நுவரெலியா மாவட்டத்தின் விவசாய துறையினை அபிவிருத்தி செய்யும் முகமாக நுவரெலியா மாவட்டத்திலிருந்து  மரக்கறிகளை மாலைத்தீவிற்கு ஏற்றுமதி செய்தல் மற்றும் நுவரெலியா மாவட்ட இளைஞர், யுவதிகளின் விளையாட்டு துறையினை மேம்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

IMG 20201006 WA0027

அத்தோடு  நுவரெலியா மாவட்டத்தில்  சுற்றுலாத்துறையை அபிவிருத்தி சம்பந்தமாகவும் கலந்தாலோசிக்கப்பபட்டது.   

இதன் போது நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் மற்றும் அமைச்சின் செயலாளர் டி.பி.ஜி குமாரசிறி மாலைத்தீவிற்க்கான உயர்ஸ்தானியகத்தின் துணை தலைவர் கதீஜாநஜிக்கா , உயர்ஸ்தானிகரின் செயலாளர் ஐஷத் நிஹாட் , அமைசச்சரின் பிரத்தியேக செயலாளர் மொஹமட்  காதர் ஆகியோர் கலந்துக்கொண்டிருந்தமை  குறிப்பிடத்தக்கது.