UPDATE – வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா நோயாளி கைது!

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நிலையில் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவேளை அங்கிருந்து தப்பியோடிய நபர் சற்று முன்னர் கொழும்பு கோட்டை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேலியகொடவை சேர்ந்த 62 வயதான டொன் சரத்குமார என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு பாதுகாப்பு அளிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

றாகமை மருத்துவனையிலிருந்து தப்பிச்சென்ற கொரோனா தொற்றாளர்..!

றாகமை மருத்துவமனையில் இருந்து கொரோனா தொற்றாளர் ஒருவர் தப்பியோடியுள்ளதாக பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

குறித்த நபரை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுப்பட்டுள்ளனர் எனவும், இந்த நபரை கண்டால் காவற்துறையினருக்கு பொது மக்கள் தகவல் வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இவரை உடனடியாக கைது செய்யாவிட்டால் பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுக்க நேரிடும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.