உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் திட்டமிட்டபடி இடம்பெறும்!

111 3
111 3

கல்வி பொதுதராதர உயர்தரம், மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை என்பன திட்டமிட்டபடி நடக்குமென கல்வியமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அறிவித்துள்ளார்.

திட்டமிட்டதன் பிரகாரம் ஒக்டோபர் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சுகாதார நடைமுறைகளுக்கு அமைய புலமை பரிசில் பரீட்சை நடைபெறும் எனவும் அதனடிப்படையில் நாடு முழுவதிலும் உள்ள 2,936 மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை 2020 எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி தொடக்கம் 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரையில் நடைபெறும் என்றும் இந்த பரீட்சைக்காக நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 2,648 மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.