தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக தொடர்ந்தும் நீடிப்பார் சம்மந்தன்!

f6b0bb3c r. sambanthan 1 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped
f6b0bb3c r. sambanthan 1 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இரா.சம்பந்தன் தொடர்ந்தும் இருப்பாரென கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது.

நேற்றைய தினம்(புதன்கிழமை) இடம்பெற்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஊடகப் பேச்சாளர் பதவிக்கு எஸ்.சிறீதரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரது பெயர்கள் பிரேரரிக்கப்பட்ட நிலையில்,முரண்பாடுகள் ஏற்பட்டமை காரணமாக பேச்சாளர் தெரிவு நேற்றைய தினம் நடைபெறவில்லை என கூறப்படுகின்றது.

பேச்சாளர் தெரிவு காலவரையறையின்றி ஒத்திவைக்கப் பட்டிருப்பதால் எம்.ஏ.சுமந்திரனே அதுவரை தொடர்ந்தும் பேச்சாளராகச் செயற்படுவார் என எனவும் தெரிவிக்கப்படுகின்றது .