வடமாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் பகுதியில் விடுதலைப் புலிகளால் புதைத்து வைத்ததாக நம்பப்படும் ஆயுதங்கள் இருப்பதாக தெரிவித்து தனிநபர் ஒருவருடைய காணியில் சற்றுமுன்னர் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் அனுமதி பெறப்பட்டு விசேட அதிரடிப்படையினர், பொலிஸார், இராணுவத்தினர், புலனாய்வாளர்கள் இணைந்து இந்த அகழ்வு பணியில் ஈடுபட்டுள்ளனர்.