எதிர்வரும் 16ம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில்
போட்டியிடும் 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற நிலையில் 12 பேர் இன்னுமொரு வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தும், தேர்தலில் நலன்களை பெற்றுக் கொள்வதற்காகவும் களமிறங்கியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தேர்தல் பிரசாரங்களின் போது பிரதான வேட்பாளர்களுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவிப்பதனையும், அவருக்காக வாக்குச் சாவடிகளில் கூடுதலான பிரதிநிதிகளை அமர்த்துவதனையும் நோக்காகக் கொண்டு இந்த வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளதாகவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இன்னும் சிலர் வேட்பாளராக களமிறங்குவதற்குக் காரணம், முதன்மை வேட்பாளர்களினால் கிடைக்கப்பெறும் நலன்களை பெற்றுக்கொள்வதற்கே ஆகும் எனவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது