ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட விசேட மாநாடு சற்றுமுன்னர் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் பிரசன்னத்துடன் மிக எழுச்சியாக ஆரம்பமாகியுள்ளது.
காலை 10.30 மணியளவில் ஆரம்பமான நிகழ்வில் கொடிஏற்றலை தொடர்ந்து செயலாளர் நாயகம் டக்ளஸ்தேவானந்தா அவர்கள் பொன்னாடை போர்த்தி மலர்மாலை அணிவிக்கப்பட்டு விழா மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டதுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியது.