வவுனியா நொச்சிமோட்டை பகுதியில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் மூன்று வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
இவ் விபத்து சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியாவில் இருந்து யாழ் நோக்கி சென்ற பிக்கப் எதிர் திசையில் வந்த காருடன் மோதியதாகவும் பின்னர் பாரஊர்தியிலும் மோதுண்டதாகவும் தகவல்கள் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.
இவ் விபத்தில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.