எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தேர்தலுக்கு முதல் நாளான 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறையளிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதற்கமைய குறித்த அறிவித்தல் அனைத்து மாவட்டங்களிலும் காணப்படுகின்ற கல்வி பணிமனைகளுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.