இலங்கை ஜனாதிபதியை சந்திக்க உள்ள சீனா அரசியல் குழுவினர்!

இலங்கை வருகை தந்துள்ள சீனாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் கம்யூனிஸ்ட் கட்சியின் தற்போதைய அரசியல் குழு உறுப்பினருமான யாங் ஜீச்சி தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளனர்.

வெளிநாட்டலுவல்கள் அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

அத்துடன் குறித்த குழுவினர் இன்றைய தினம் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவையும் சந்திக்கவுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சீனாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், கம்யூனிஸ்ட் கட்சியின் தற்போதைய அரசியல் குழு உறுப்பினருமான யாங் ஜீச்சி தலைமையிலான உயர்மட்ட குழு, நேற்றிரவு நாட்டை வந்தடைந்தது.

அவர்களை இலங்கையிலுள்ள சீன தூதரக அதிகாரிகள் மற்றும் வெளிவிகார அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட தரப்பினர் வரவேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.