சிலாபத்தில் உயர்தர வகுப்பு மாணவனுக்கு கொரோனா!

சிலாபம் பிரதேசத்தில் பாடசாலை மாணவனுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆராச்சிக்கட்டு பிரதேசத்தை சேர்ந்த 17 வயதான இந்த மாணவன் இம்முறை உயர் தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளார்.

இந்த மாணவனுக்கு கொரோனா வைரஸ் எப்படி தொற்றியது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.

மாணவன் சிலாபம் நகரில் நடத்தப்படும் சில தனியார் பகுதி நேர வகுப்புகளிலும் கலந்துகொண்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு உள்ளான மாணவன் சிலாபம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவரது குடும்பத்தினர் மற்றும் அயலவர்கள் தமது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.