கெசினோ, இரவு நேர களியாட்ட விடுதிகள், அமர்ந்திருந்து மது அருந்தும் மதுபானக்கடைகள், வெளிநாட்டு மதுபான கடைகள், மற்றும் ஏனைய மது அருந்தும் இடங்கள் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை மூடுமாறு சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள சுகாதார விதிமுறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு அமைவாக சாராயக்கடைகள், உணவகங்கள் விடுதிகள் ஆகியவற்றை நடத்திச்செல்ல முடியும் என கலால் வரி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்தார்.