வவுனியா பழைய பஸ் நிலையத்தில் தொற்று நீக்கி மருந்துகள் தெளித்தல்!

army vavuniya 2
army vavuniya 2


நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் வவுனியாவில் அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் வன்னி இராணுவத் தலைமையகத்தால் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

பொதுமக்களின் நடமாட்டம் அதிகளவில் காணப்படும் பகுதியான வவுனியா பழைய பஸ் நிலையத்தில் இன்று தொற்று நீக்கும் நடவடிக்கை இடம்பெற்றது.

பழைய பஸ் நிலையத்தைச் சூழவுள்ள வர்த்தக நிலையங்களுக்கு முன்பாகவும் மற்றும் நடைபாதைகள் போன்றவற்றிலும் இராணுவத்தினரால் தொற்று நீக்கி மருந்துகள் தெளிக்கப்பட்டன.