பி.சி.ஆர் பரிசோதனைக்கு காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் உட்படுத்த நடவடிக்கை!

pcr exame 1 1
pcr exame 1 1

யாழ்ப்பாணம் – அனலைதீவு பகுதியில் மஞ்சள் கடத்தலில் ஈடுபட்டபோது ஊர்காவற்துறை காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்ட மூன்று பேரும், பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நீதவானின் அனுமதியுடன் அவர்களை தனிமைப்படுத்தப்பட்ட சிறையில் தடுத்து வைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள ​தெரியவந்துள்ளது.

இதேநேரம், அனலைதீவு பகுதியில் குறித்த மூன்று நபர்களும் நடமாடியதாக கருதப்படும் இடங்களில் உள்ள 10 குடும்பங்களைச் சேர்ந்த 39 பேர் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கப்பட்டுள்ளது.