கொரோனா தொற்றுக்குள்ளான மீனவர் : துறைமுகத்தை மூடுவதற்கு நடவடிக்கை!

584c20f168d657839ff9f3a347407d57 XL
584c20f168d657839ff9f3a347407d57 XL

நீர்கொழும்பு டிக்கோவிட்ட துறைமுகத்தில் மாரவில பிரதேசத்தில் வசிக்கும் 28 வயதுடைய மீனவர் ஒருவருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதனையடுத்து டிக்கோவிட்ட துறைமுகத்தை அதற்கு பொறுப்பான அதிகாரிகள் மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ள மீனவர் தொடர்பில் ​தெரியவருவதாவது,

கடலில் படகில் குறித்த மீனவர் மேலும் ஐந்து மீனவர்களுடன் இணைந்து தங்கியிருந்த வேளை காய்ச்சல் அறிகுறிகளுடன் தென்பட்டுள்ளார்.

இதை​த்தொடர்ந்து இன்று சனிக்கிழமை அவர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த மீனவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்றுறுதிப்படுத்தப்பட்டுள்ளது.