எம்முடன் இணைந்து பயணித்தால் மாத்திரமே, ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிர்காலம் இருக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச்செயலருமான திஸ்ஸ அத்தனாயக்க தெரிவித்துள்ளார் .
பொரள்ளையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே திஸ்ஸ அத்தனாயக்க இதனைக் குறிப்பிட்டார்.