யாழ் நகர வர்த்தகர்கள் யாழிலுள்ள வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தின் முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்றை இன்று காலை முன்னெடுத்துள்ளனர்.
யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள பழக்கடைகளை அகற்றுமாறு யாழ்பாண மாநகர சபை அறிவித்து காலக்கெடு விடுத்துள்ளது. இந் நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்ட முன்னெடுக்கப்பட்டு ஆளுநரிடம் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.