யாழ் மாதகல் கடலில் மிதந்து வந்த 116 கிலோ கஞ்சா மீட்பு!

e8ea6834 c57b 4742 8fc5 a47072ec1d59
e8ea6834 c57b 4742 8fc5 a47072ec1d59

யாழ்ப்பாணம் மாதகல் கடல் பகுதியில் மர்மமான முறையில் மிதந்து வந்த 116 கிலோ கேரள கஞ்சா கடற்படையினரால் இன்று (12) அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்படையினர் இன்று அதிகாலை கடலில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.இதன் போது மாதகல் கடல் பகுதியில் மர்ம பொதிகள் மிதந்து வருவதை அவதானித்துள்ளனர்.

மேலும் மிதந்து வந்த மர்ம பொருட்களை கடற்படையினர் சோதனையிட்ட போது அதில் இருந்து கேரளா கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கேரள கஞ்சாவினை கடற் படையினர் மீட்டு காங்கேசன்துறை காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட பொதிகள் 116 கிலோ எடையுடைய கேரள கஞ்சா என்று காங்கேசன் துறை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர் . மேலும் இந்த சம்பவம் தொடர்பில் காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.