தொழில் திணைக்களத்தின் பொது சேவைகள் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் பிராந்திய அலுவலகங்கள் மூலம் செய்து கொள்ள வேண்டிய அனைத்து ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தொழில் திணைக்கள ஆணையாளர் நாயகம் ஏ. விமலவீர தெரிவித்துள்ளார்.
தற்போதைய கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சேவைகளைப் பெற கொழும்பின் நாரஹன்பிட்டியவில் உள்ள தலைமை அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை எனவும் தொழில் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டே தொழில் ஆணையாளர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
திணைக்களத்தின் பொது சேவைகள் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் அனைத்து பிராந்திய அலுவலகங்களுக்கும் பரவலாக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, அனைத்து சேவைகளையும் பிராந்திய அலுவலகங்கள் மூலம் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.