கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 61 பேர் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
அதற்கமைய டோஹா கட்டாரிலிருந்து 48 பேரும் அபுதாபியிலிருந்து 8 பேரும் இந்தியாவிலிருந்து ஐவரும் நாடு திரும்பியுள்ளனர்.
நாடு திரும்பிய அனைவருக்கும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையக் கட்டடங்களில் பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அவர்கள் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.