செந்தில் தொண்டமான் பிரதமரின் பதுளை மாவட்ட இணைப்பாளராக நியமனம்!

download 2 4
download 2 4

பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் பதுளை மாவட்ட இணைப்பாளராக, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உபத்தலைவர், முன்னாள் ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார்.

அலரிமாளிகையில் இன்று அவருக்கு இந்த நியமனம் பிரதமரால் வழங்கப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே பிரதமரது பெருந்தோட்டத்துறை இணைப்பாளராகவும் செந்தில் தொண்டமான் பதவிவகித்து வருகின்ற நிலையில், அதற்கு மேலதிகமாக இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரதமரது மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட இணைப்பாளராக கருணா அம்மான் என அறியப்படும் விநாயகமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான நியமனக் கடிதம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த பொதுத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் செந்தில் தொண்டமான் பதுளை மாவட்டத்திலும், விநாயகமூர்த்தி முரளிதரன் அம்பாறை மாவட்டத்திலும் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடதக்கது.