யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 சாராயப் போத்தல்கள் மீட்பு!

இளவாலை காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 சாராயப் போத்தல்களை இளவாலை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று (13) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பண்டத்தரிப்பு நகரப் பகுதியிலுள்ள வீடொன்றில் சாராயப் போத்தல்கள் சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும் அதிக விலைக்கு விக்கப்படுவதாகவும் காவல்துறைக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் பண்டத்தரிப்பு நகரப் பகுதியில் உள்ள வீடு ஒன்று முற்றுகையிடப்பட்டது.

குறித்த வீட்டினை காவல்துறை சோதனையிட்டபோது அங்கு 50 சாராயப் போத்தல்கள் மீட்கப்பட்டதுடன் வீட்டின் உரிமையாளரான 48 வயதுடைய சந்தேக நபரும் இளவாலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.