திருகோணமலையில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் பெண் உட்பட இரு சடலங்கள் மீட்பு!

திருகோணமலை வீதி – மிஹிந்தலை பகுதியைச் சேர்ந்த அம்பத்தலாகம பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து பெண்ணொருவர் உட்பட இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த வீட்டின் அறையொன்றில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டதுடன் அதே அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

திருகோணமலை வீதி – மிஹிந்தலை பகுதியைச் சேர்ந்த 48 வயதான பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

அத்தோடு, ஹிங்குருவௌ – எல்லவௌ பகுதியைச் சேர்ந்த 57 வயதான நபரே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அந்தப் பெண்ணின் கழுத்தை வெட்டி கொலை செய்து விட்டு சந்தேக நபர் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.