வவுனியாவில் காணப்படும் மின்கம்பங்கள் சரிந்து விழும் நிலையில் காணப்படுவதாக வெளியாகிய செய்திக்கு பதிலளித்த வீதி அபிவிருத்தி அதிகார சபை , மின்சார சபை பொறியியாளர்கள் , உயர் அதிகாரிகள் தெரிவிக்கையில் , தற்போது இடம்பெற்று வரும் க.பொ.த உயர்தரப்பரீட்சைகள் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருவதால் மின்சாரத்தை துண்டிக்க முடியாத நிலை காணப்படுகின்றது. எனினும் இவ்வாறு சரிந்து காணப்படும் மின் கம்பத்தினால் பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்புக்கள் காணப்படவில்லை .
தற்போது நடைபெற்று வரும் பரீட்சைகள் நிறைவடைந்ததும் அகற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். பழுதடைந்த மின்கம்பங்களை அகற்றுவதற்கு அனுமதிகள் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது . அவ்வாறு அவசர நிலை ஏற்படுமாக இருந்தால் அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மின்சார சபை , வீதி திருத்தப்பணி உயர் அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர் .