வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடி வந்த தாயார் ஒருவர் நேற்றைய தினம் (14) சுகயீனம் காரணமாக சாவடைந்துள்ளார்
மட்டக்களப்பு மாவட்டம் கொம்மாந்துறை செங்கலடியைச்சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான சித்திரவேல் அன்னம்மா என்ற தாயாரே இவ்வாறு சுகயீனம் காரணமாக இன்றைய தினம் சாவடைந்துள்ளார்
கடந்த 1994 ம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை 26 வருடங்களாக தேடி வந்த தாயாரே இவ்வாறு சாவடைந்துள்ளார்
இராணுவத்தினராலும் ,துணை இராணுவக்குழுக்களாலும்,கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு சர்வதேச நீதி வேண்டி கடந்த 2012 ம் ஆண்டில் இருந்து இன்றுவரை வட கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட
போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார்.
நீதியை வேண்டிய போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பல நூற்றுக்கணக்கான தாய்மார்கள் தந்தையர்கள் சாவடைந்த நிலையில் குறித்த தாயாரும் நேற்றைய தினம் (14 ) சாவடைந்துள்ளார்