முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர்கள் இருவர் மீதான தாக்குதலைக் கண்டித்து மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டம், மட்டக்களப்பு, காந்தி பூங்காவிற்கு முன்னால் சமூக இடைவெளியைப் பேணி, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இன்று (15) காலை இந்தப் போராட்டம் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், ஊடக அமையம் மற்றும் ஊடகத்துறை ஊழியர் தொழிற்சங்க சம்மேளனம் ஆகிய இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்ததுடன் இதன்போது, ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
குறித்த போராட்டத்தில் கலந்துகொண்டோர், அனைத்து தரப்பினராலும் ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு வேண்டும், ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தைப் பறிக்க வேண்டாம், இலங்கையில் அதிகரித்துவரும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள், அடக்குமுறைகள், அச்சுறுத்தல்களைத் தடுத்து நிறுத்துவதற்கு அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.