முல்லைத்தீவில் வீதி திருத்தப்பணி ஊழியர்கள் இருவர் தனிமைப்படுத்தலில்!

1 16
1 16

முல்லைத்தீவில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் வீதி திருத்தப்பணிகள் மேற்கொண்டு வரும் இரு ஊழியர்கள் கம்பஹா மாவட்டத்திலிருந்து வேலைக்குச் சென்ற இருவர் வடமாகாண ஆளுநரின் உத்தரவிற்கு அமைவாக தளிமைப்படுத்தப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார் . 


இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்

வடமாகாணத்தில் இடம்பெற்று வரும் வீதி திருத்தப்பணிகள் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. சுகாதார நடைமுறைகளுடன் ஊழியர்கள் வீதி திருத்தப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.தென்பகுதி கம்பஹா மாவட்டத்திலிருந்து வந்த இரு ஊழியர்கள் வடமாகாண ஆளுநரின் பணிப்புரைக்கு அமைவாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் .

அவர்களுக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தினடிப்படையில் பி.சி.ஆர் பரிசோதனைகள் நேற்று மேற்கொள்ளப்பட்டுள்ளது . குறித்த இருவரையும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் ஏனையவர்கள் தொடர்ந்து வீதி திருத்தப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் .

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியால் கொழும்பிலிருந்து பொருட்கள் எடுத்து வருவதில் சில இடர்பாடுகளை எதிர்நோக்கி வருகின்றோம் . இருந்தும் உரியமுறையில் பணிகளை மேற்கொள்வதற்கு வடமாகாண ஆளுநர் , ஒப்பந்ததாரரும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொறியியலாளர்களும் ஒத்துழைப்புக்களை வழங்கி பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றோம் என்று மேலும் தெரிவித்துள்ளமை குறுிப்பிடத்தக்கது.