மேலும் 19 பேருக்கு கொ​ரோனா தொற்று உறுதி!

Coronamedicine 1583822800908 1 2
Coronamedicine 1583822800908 1 2

மினுவாங்கொடை கொத்தணியில் மேலும் 19 பேருக்கு கொ​ரோனா தொற்றுறுதியாகியுள்ளது.

தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள 09 பேருக்கும், அவர்களுடன் தொடர்பினை பேணிய 10 பேருக்கும் இவ்வாறு கொ​ரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, மினுவாங்கொடை கொத்தணியில் கொ​ரோனா தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 789 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன் நாட்டில் கொகொ​ரோனா தொற்றுறுதியான மேலும் 23 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை மூவாயிரத்து 380 ஆக அதிகரித்துள்ளது.