மினுவாங்கொடை கொத்தணியில் மேலும் 19 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.
தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள 09 பேருக்கும், அவர்களுடன் தொடர்பினை பேணிய 10 பேருக்கும் இவ்வாறு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, மினுவாங்கொடை கொத்தணியில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 789 ஆக உயர்வடைந்துள்ளது.
அத்துடன் நாட்டில் கொகொரோனா தொற்றுறுதியான மேலும் 23 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.
இதற்கமைய குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை மூவாயிரத்து 380 ஆக அதிகரித்துள்ளது.