யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபடும்போது சுவர் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச் சம்பவம் இன்று (16) அதிகாலை யாழ்ப்பாணம் – அரியாலை, நாவலடி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் 44 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.