பிரதமர் அலுவலகப் பிரதானியாக யோசித ராஜபக்ஷ நியமனம்..!

ஸ்ரீலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பணியாளர் சபை பிரதானியாக அவரது மகன் யோஷித ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இலங்கைக்கான பதில் சீன தூதுவர் ஹுவெய், அண்மையில் யோஷித ராஜபக்ஷவை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளதாக தூதரகத்தின் டுவிட்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில் இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்ட சீனாவின் உயர்மட்ட தூது குழுவினர் மற்றும் இலங்கைக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பிலும் இரு தரப்பு நட்பு தொடர்பிலும் கலந்துரையாடல் மேற்கொண்டதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.