மட்டக்களப்பு – பிள்ளையாரடி பறவைகள் சரணாலயத்தில் தீ பரவல்

555 4
555 4

மட்டக்களப்பு – பிள்ளையாரடி பறவைகள் சரணாலயத்தில் பரவிய தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று முற்பகல் 11.30 அளவில் சரணாலயத்தில் தீ பரவியுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் கடும் பிரயத்தனங்களுக்கு மத்தியில் தீயை கட்டுப்படுத்தியுள்ளனர். பறவைகள் சரணாலயத்தின் சுமார் 4 ஏக்கர் பகுதி தீக்கிரையாகியுள்ளதாக தீயணைப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.