விடுதலை புலிகளிடம் இருந்து நாட்டு மக்களை காப்பதில் பெரும் பங்காற்றியவர் ஜனாதிபதி – ஜி.எல்.பீரிஸ்

66666 1
66666 1

நாட்டில் இடம் பெற்ற விடுதலை புலிகளுடனான யுத்தத்தில் இருந்து மக்களையும் நாட்டின் பொருளாதாரத்தையும் காப்பாற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதில் உளவுத்துறையுடன் நெருக்கமான உறவுகளை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பேணி வந்தார் எனவும் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் தேசிய பாதுகாப்புக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாக நாடு இன்னும் பீதியிலேயே உள்ளதெனவும் கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு குடியேற்றவாசிகளை கையாள சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

கடவுச்சீட்டு வழங்கும் போது இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டினரின் சுற்றுப்புறங்களை முறையாக ஆய்வு செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தலும் வழங்கப்பட்டு இருந்தது.

ஆனால் கடந்த காலத்தில் அவ்வாறான செயற்பாடுகள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை. உதாரணமாக, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள முன்னாள் காவல்துறை மா அதிபர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் கூறிய கருத்துக்கள் அவர்கள் தேசிய பாதுகாப்பை எவ்வாறு கையாண்டனர் என்பதை வெளிப்படுத்துகின்றது” என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .