மீண்டும் வழமைக்கு திரும்புகின்றது மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள சேவைகள்!

86825cffd0f86bcc2f1e90eea888ed0c XL
86825cffd0f86bcc2f1e90eea888ed0c XL

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள சேவைகளை மீண்டும் வழமைக்கு கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் சுமித் சி.கே. அழகக்கோன் இதனைத் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலைத் தொடர்ந்து, கடந்த 07ஆம் திகதி முதல், நாரஹேன்பிட்டி மற்றும் வேரஹெர மற்றும் கம்பஹாவிலுள்ள மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.

அத்துடன், குறிப்பிட்ட இலக்கங்களை தொடர்பு கொண்டு சேவைகளைப் பெறுவதற்கான முற்பதிவுகளை மேற்கொள்ளுமாறு, அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வாகன உரிமை மாற்றம் உள்ளிட்ட விண்ணப்பங்களை, அந்தந்த பிரதேச செயலகங்களில் ஒப்படைப்பதற்கான வசதிகள் காணப்படுவதால், அத்தியாவசிய சேவைக்காக மாத்திரம் திணைக்களத்தின் பிரதான அலுவலுகத்திற்கு வருமாறும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.