லயன்ஸ் கழகத்தினர் யாழ்ப்பாண காவல்துறையினருடன் இணைந்து யாழ் நகரில் கொரோனா விழிப் புணர்வு செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது நாட்டில் நிலவும் கொரோனா தொற்று அச்ச நிலைமையில் யாழ் குடா நாட்டில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் முகமாகவும் பொதுமக்களுக்கு கொரோனா தொடர்பாக விழிப்புணர்வூட்டும் முகமாக யாழ் நகர் சிற்றி லயன்ஸ் கழகமும் யாழ்ப்பாண காவல்துறையிரும் இணைந்து யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் கொரோனா விழிப்புணர்வு செயற்பாட்டினை மேற்கொண்டிருந்தனர்.
குறித்த விழிப்புணர்வின் போது முகக்கவசம் அணியாது யாழ் நகருக்குள் வருகை தந்த பொது மக்களுக்கு முக கவசங்கள் வழங்கி வைக்கப்பட்டது. மேலும் சமூக இடைவெளி பேணுதல் , சுகாதார நடைமுறைகளை பின்பற்றுதல் தொடர்பில் யாழ்ப்பாண காவல் நிலையப் பொறுப்பதிகாரியினால் விழிப்புணர்வு செயற்பாடும் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த விழிப்புணர்வு செயற்பாட்டில் யாழ்ப்பாண காவல் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ மற்றும் சிற்றி லயன்ஸ் கழக உறுப்பினர்கள் மற்றும் யாழ்ப்பாண காவல்துறையினர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.