மட்டக்களப்பு கல்முனை பகுதியில் விபத்து :இருவர் படுகாயம்

FB IMG 1602985895453
FB IMG 1602985895453

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின், செட்டிபாளையம் பகுதியில் இன்று அதிகாலை (18) இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தை அதே வீதியூடாக பயணித்துக்கொண்டிருந்த மகிழூர்ந்து முந்திச்செல்ல முயற்சித்த போதே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இவ் விபத்தில் மகிழூர்ந்தில் பயணம் செய்த இருவர் காயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்

இவ் விபத்தின் போது மகிழூர்ந்தின் முன் பகுதி பலத்த சேதமடைந்ததுடன் பேருந்தின் பின் பகுதிக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

இவ் விபத்து குறித்து மேலதிக விசாணைகளை களுவாஞ்சிகுடி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.