யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் கூட்டணி அலுவலகம் திறப்பு

DSC6145
DSC6145

தமிழ் மக்கள் கூட்டணியின் பொது மக்கள் தொடர்பு அலுவலகம் யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் இன்று கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி விக்னேஸ்வரனால் திறந்து வைக்கப்பட்டது.

இன்று காலை திருநெல்வேலி ஆடியபாதம் வீதியில் உள்ள உப அலுவலகத்தில் இந்த நிகழ்வு இடம் பெற்றது. குறித்த மக்கள் தொடர்பாடல் அலுவலகத்தை நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் நாடா வெட்டி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பங்காளி கட்சிகளின் பிரதிநிதிகளான சுரேஷ் பிரேமச்சந்திரன் சிவாஜிலிங்கம் போன்றவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.