போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய இரு பெண்கள் கைது

kaithu

களுத்துறை சிறைச்சாலையில் இருந்து கைப்பேசியின் ஊடாக ​மேற்கொள்ளப்படும் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய 2 பெண்கள் அங்குலானை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது அவர்களிடம் இருந்து 8 கிராம் மற்றும் 570 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

21 மற்றும் 34 வயது உடைய அவர்கள் அங்குலானை மற்றும் ராவதாவத்தை பிரதேசங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அங்குலானை காவல்துறை ஊழல் தடுப்புப் பிரிவினரால் சந்தேக நபர்களான பெண்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இதன்போது அவர்களிடம் இருந்து 33 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த பெண்களை மொரட்டுவை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய பின்னர் எதிர்வரும் 29 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.