தலைமை பிக்கு உட்பட 05 துறவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி!

unnamed 12 1
unnamed 12 1

மத்துகமவில் உள்ள ஒவிடிகல பௌத்த விகாரையின் தலைமை பிக்கு உட்பட ஐந்து துறவிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. சுகாதார அலுவலர் பொது சுகாதார ஆய்வாளர் பி.டி. லியோனல் இதனை தெரிவித்துள்ளார்.

இன்றைய நிலவரப்படி மத்துகம சுகாதாரப்பிரிவில் மொத்தம் 26 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதை விட அகலவத்தையில் மூன்று நோயாளிகளும், வலலவிட்ட பகுதியில் ஒரு நோயாளியும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இயங்கும் ஒரு சொகுசு பேருந்தின் உரிமையாளர், ஓட்டுநர், நடத்துனர் மற்றும் பெலவத்த பகுதியில் உள்ள மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு செவிலியர் ஆகியோர் முதலில் மத்துகமவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

இதையடுத்து குறித்த சொகுசு பேருந்தில் துறவிகள் அனுராதபுரத்திற்கு யாத்திரை சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.