மேலும் 44 பேர் பூரண குணமடைவு

6565 1
6565 1

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 44 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதன்படி, இதுவரை 3,501 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.