மட்டக்களப்பில் நீர்ப்பாசன தொகுதிகளை மறுசீரமைக்க நடவடிக்கை!

5 7
5 7

நீர்ப்பாசன செழுமை எனும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராமிய குளங்களை அண்டியுள்ள 5000 விவசாய நீர்ப்பாசன தொகுதிகளை மறு சீரமைக்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டம் தொடர்பாக அரச திணைக்கள அதிகாரிகளுடனான கலந்துரையாடல் நேற்று (20) பிற்பகல் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

மாவட்ட அரசாங்க அதிபராக கடமைகளை பொறுப்பேற்று கொண்ட அரச அதிபர் கே.கருணாகரன் தலைமையில் நடைபெற்ற முதலாவது அரச அதிகாரிகளுடனான கலந்துரையாடலில் மாவட்டத்தில் புனரமைப்பு செய்யப்பட வேண்டிய குளங்கள், அணைக்கட்டுகள், கால்வாய்கள் போன்ற மறு சீரமைக்கும் 2020 தொடக்கம் 2022 வரையான மூன்று வருட தேசிய நிகழ்ச்சித் திட்டம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாகாண நீர்ப்பாசன பணிப்பாளர், மாவட்ட நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர்கள், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.