தான் ஜனாதிபதி ஆனதன் பின்னர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையுள்ள ஒருவரை பிரதமராக நியமிப்பேன் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
விசேட உரையொன்றை இன்று (Nov.07) ஆற்றிய அவர்,
மக்களின் ஒருமித்த கருத்து இல்லாமல் புதிய அரசியலமைப்பு செயல்படுத்தப்படமாட்டாது எனவும், புதிய அமைச்சரவைக்கு மோசடியில் ஈடுபடாத நபர்கள் தெரிவுசெய்யப்பட்டு கூடிய விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படும் எனவும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பெற்றுக்கொடுக்கப்படும் வாகன அனுமதிப்பத்திரத் இரத்துச்செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.