மீகொடை வர்த்தக நிலைய உரிமையாளருக்கு கொரோனா தொற்று உறுதி

55555 1
55555 1

மீகொடை பொருளாதார மத்திய நிலைய வர்த்தக நிலையமொன்றில் உரிமையாளருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் இதனை தெரிவித்துள்ளார். இதன் காரணமாக குறித்து விற்பனை நிலையத்தில் பணிபுரிந்த 15 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நபர் சிறுநீரக நோய் நிலைமை காரணமாக தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதன் போது பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த நபர் மீகொடை பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் அவருடன் நெருங்கிப் பழகியவர்களை இனங்காணும் பணியில் சுகாதார அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.